Monday, January 23, 2006

தாயின் நிலை

உயிரில் பாதி தந்து என்னை உருவாக்கியவள்
உலகில் பாதியை எனக்கு உணர்த்தியவள்
அன்பிற்கோர் எல்லையில்லை என்று புகட்டியவள்
பாசத்திற்கார் வேசமில்லை என்றுசொல்லியவள்
பாலர் பருவத்தில் அம்மாவாக இருந்தவள்
இருபதாவது வயதினில் சகோதரியாக இருந்தாள்
என் முப்பது தனில் என்சொல் கேட்கும் மகளாகிவிட்டாள்
நான் நாற்பதைக் கடந்தபோது "அந்தோ பரிதாபம்"
என் குடும்பத்திற்கு வேண்டப்படாத ஒருத்தியாகிவிட்டாள்..

நினைவுப்பொருட்கள்

நீ பிரிந்த போது
உன் நினைவு பொருட்களை மட்டும்
ஏன் விட்டுச்சென்றாய்
நீ என்னுள் காயமாய் இருக்கின்றாய்
காலமெனும் மருந்து கொண்டு
அக்காயத்தை ஆற்றவே முற்படுகிறேன்
ஆனால் உன் நினைவுப்பொருட்களோ
காயத்தை ஆற்ற விடாதா
"ஈ" க்களாக இருக்கின்றனவே....

Tuesday, January 10, 2006

கனவு மெய்பட வேண்டும்

நீ கொண்ட வெட்கச்சிவப்பு
என் தோலின் நிறமாக வேண்டும்

நீ கொண்ட வெண்சிருப்பு
என் மனதின் தூய்மையாக வேண்டும்

நீ கொண்ட கருங்கூந்தல்
என் கனவின் இருளாக வேண்டும்

நீ கொண்ட கண்ணின்கருமணி
என் முகம் காட்டும் தளவாடியாக் வேண்டும்

நீ கொண்ட நாற்குணங்களும்
என் தங்கைக்கும் கிடைத்தருள வேண்டும்

நீ கொண்ட அன்பு மழையில்
என் தந்தையும்தாயும் மணற்சிற்பமாக வேண்டும்

நீ கொண்ட காதல்
என் உடலின் உயிராக வேண்டும்

நீ கொண்ட உறவு
என் பிரமச்சரியத்தின் முடிவாக வேண்டும்

நீ கொண்ட பிரிவு
என் வாழ்வின் முடிவாக வேண்டும்

பூட்டு


கடினப்பட்டு கண்விழித்தது
உன்னை நம்பியே
எனது அன்பிற்கும்,திறமைக்கும்கிடைத்தவை
உன்னை நம்பியே
நாளை என்னை சொந்தம் கொண்டாட வருவதும்
உன்னை நம்பியே
நடுத்தெருவில் நாதியற்றவனாய் விடமாட்டாய் என்பதும்
உன்னை நம்பியே
போய்வருகிறேன் போய்வருகிறேன்
என்னை காப்பாற்றுவாயோ?, களுத்தறுப்பாயோ?
உன்னை நம்பியே போய்வருகிறேன்...

இலங்கை தனில் இருபதைக்கடந்தால்

நாலாம்பிறை கண்டால் நாயலைச்சல் என்றது ஐதீகம்
இருபதைக் கடந்தால் அவமானம் என்றது அனுபவம்
கறுப்புத் தடித்த அட்டையிலே காகிதப்பொட்டலம்
பேருக்குத்தான் அது சான்றிதழ்
"அனுபவம் உண்டா" என்ற் குரலுக்கு முன்னே குப்பைகளாய்
"எவ்வளவு வைப்பாய்" என்ற இலஞ்சத்துக்கு முன்னே கசக்கி போட்ட காகிதங்களாய்
ஆணவம் கொண்ட முதலாளி ஒருவன்!

"பணமிருந்தால் உள்ளேயெடு இல்லையேல் காய்வெட்டிவிடு என்றான்"
கலைமகளையே அறிந்திராத என்னோருவன்!
"அனுபவமே இல்லாத உன்னைவைத்து அழிந்து போவதா என்றான்"
தலைப்பிரசவத்திற்கே அனுபவம் கேட்டால்

அனுபவம் கிடைப்பது எப்போது?
பிள்ளை பெறுவதுதான் எப்போது?
அனுபவம்தான் முதன்மையென்றால்

படிப்பு எதற்கு பட்டம்தான் எதற்கு
பணம்தான் முதன்மையென்றால்
பாடசாலை எதற்கு பல்கலைக்கழகம்தான் எதற்கு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கிறது எம்வீடு

வெட்டிப்பசங்கள் என தூற்றுகிறது எம்ஊரு
அழுத்திய உடைகளுடன் ஏறுகிறோம் அலுவலகப்படிகளில்
அலுத்துப்போன உணர்வுகளுடன் இறங்குகிறோம் அதேபடிகளில்..

Sunday, January 08, 2006

நிலா ஒளி

பாரதிக்கோ கள்ளின் மயக்க ஒளி
தலைவனுக்கோ தலைவியின் வெட்க ஒளி
ஆம்ஸ்ரோங்கிற்கோ இலட்சிய ஒளி
விஞ்ஞானத்துக்கோ கடன் ஒளி
எனக்கோ கருமையின் ஒளி
குருடனின் நிலை அதுதனே..

செல்லிடப்பேசி




கொடுத்துவைத்தவன்யா நீ !!
நீ செல்லாத இடமேது
நீ தவளாத கையேது
நீ சிணுங்காத நேரமேது
நீ கேட்காத இரகசியம்தானேது
அன்று தனது காலடிகளால் உலகையாண்டவன்

இன்று உன் வடிவில் உலகையாழ்கிறானோ?

தளவாடி

எந்த அஃறிணைக்கும் இல்லாத சிறப்பு இதற்கு
ஏனெனில் இதைத்தானே அதிகநேரம்
அலுப்புச் சலிப்பில்லாமல் கவனிக்கிறோம்.