Tuesday, March 28, 2006

என்னமோ நடக்குது.. மர்மாய் இருக்குது..

பார்த்து என்னமோ பத்து நாள்தான்
அந்த பக்கத்து வீட்டுப் பைங்கிளியை
கஞ்சப்பயலொருவன் செய்த குறுக்கிலுமாய்
வள்ளல்பயலொருவன் செய்த நெஞ்சிலுமாய்
இருந்தென்னை காற்றுப்போன பந்தாக்கிவிட்டாள்

இந்நேரம் அவள் பள்ளியெழுவாளே, பல்துலக்குவாளே,
குளிக்கப்போறாளே இப்போ "சோப்பு"போடுவாளோ
ச்சீ ச்சீ வெட்கத்தை விட்டுச்சொன்னால் தானென்ன
இப்போதெல்லாம் என்மனம் குப்பைக்கூடைகள்தாம்

அவள் தந்தை தாய் அறியுமோ ?
ஆனாலும் யாமறியும் அவள்
என்னெல்லாம் படிக்கிறாள் எங்குகெல்லாம்படிக்கிறாள்
எப்படி யெல்லாம் படிக்கிறாளெண்டு

எனக்கு இப்போது என்
நண்பர்களெல்லாம் எதிரிகளாய்,வானரக்கூட்டங்களாய்
அவள் பத்துவயதுதம்பி மட்டும் ஆருயிர்தோழனாய்

அம்மாகூட மெய்சிலிர்த்துதான் போனாள்
"என் பையனுக்கு பொறுப்பு வந்திட்டுது"
காவாலிகளோடு சேர்ந்து ஊரச்சுத்தாம
வீட்டோட இருக்கிறானேயென்று

மனுசனாடா நீ? நேத்து வந்தவளுக்காக நம்மளையெல்லாம்...
முன்னால் நண்பன் திட்டுவதுககூட விளங்கவில்லை
நான்தான் சுவத்தில் காதைவைத்து அவள் தன்னடுப்படியில்
முணுமுணுக்கும் பாட்டை இரசித்துக்கொண்டு இருக்கின்றேனே.