Tuesday, April 11, 2006

நானறியலையே

கால் கடுக்க காததூரம் நீ கல்லூரிக்குப் போகையிலே
என்னையும் நிழலாக்கிவிட்ட கள்ளியே
ஏனே அப்போது வரை நானறியலையே
"செருப்பு" உன் காலுக்கு மட்டுமல்ல
என் கன்னத்துக்கும் தானெண்டு

நீ அடிக்கடி திரும்பிப் பார்க்கையலெ
என் முடியை கதானாயகனாட்டம் கோதிவிடுகையிலே
ஏனோ அப்போது வரை நானறியலையே
உன் அண்ணன் தான் என் வில்லனெண்டு

ஆவணி மாசத்து என் தோழனின் மணப்பந்தலிலே
மணப்பெண்ணாக நீ வீற்றிருக்கையிலே
ஏனோ அப்போது வரை நானறியலையே
மாலையிட்ட அவன்தானுந்தன் மச்சானெண்டு.