Friday, February 10, 2006

"டும் டும் டும்" ஒப்பாரி

ஐயோ ஐயோ ஐயைய்யோ......
அநியாயத்துக்கு இப்பிடி பண்ணிட்டீயே
நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்த
பட்டாம் பூச்சி போல சுத்தித் திரிஞ்சியே
"பாவிப்பயலே" விட்டில் பூச்சி போலயாயிட்டியே
உனக்கு என்ன கேடு வந்ததுச்சின்னு
இப்பிடிப் பண்ணிட்டீயே "கேனப்பயலே"
உன் அழகுக்கு என்ன கேடு,அறிவுக்குத்தான் யாரீடு
ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்
"நாறப்பயலே" மதிமழுங்கி மரமாயிட்டீயே
ஐயோ ஐயோ ஐயைய்யோ............
கல்யாணம் கட்டிக்கிட்டீயே "களவானிப்பயலே"
கல்யாணம் கட்டிக்கிட்டியே
ஐயோ ஐயோ ஐயைய்யோ.......

4 comments:

ilavanji said...

என்னத்துக்கு இந்த அலப்பரை?!

கொஞ்ச நாள் பொறுமப்பு! உமக்கும் விட்டில்பூச்சியாக வாய்ப்பு வரும்!! :)

சுதேசன் said...

அதான் பயமாயிருக்குது ஏன்னா உங்க மாதிரி நல்லவங்க சொல்லு
பலிச்சிடுமாமெண்டெல்லோ சொல்லுகினம்...

U.P.Tharsan said...

வணக்கம் நீங்கள் தமிழ்மணத்தில் இணைய ஏன் முயற்சிசெய்யவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்து... தமிழ்மணத்தை வாசித்து அதில் காட்டப்படும் வழிமுறைகளை கடைப்பிடித்தால், தமிழ்மணத்தில் இலகுவாக இணைந்துகொள்ளமுடியும்.

சுதேசன் said...

நன்றி முயற்ச்சி செய்கிறேன்.