Sunday, July 30, 2006

ஆணின் பார்வையில் பெண்

உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்த்ம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வைகொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

Saturday, July 01, 2006

அறியா மனைவி




உனக்கு பசிவந்த போது என்னைத்தின்றாய்
எனக்கு பசிவந்த போது உன்னைத்தின்றேன்
நமக்கு பசிவந்த போது நம்மைத்தின்றோம்
இருந்தும் இதுவரை நானறியேன் யாருக்கு
பசிவந்ததென்று நீ அவளைதின்பதற்கு???