Monday, August 14, 2006

கரியாகி கல்லாகி

தலைக்குமேலே கூவிச்சென்ற இயந்திரப்பறவை
போட்ட பல எச்சங்களினால்
கண்மூடி கண்திறப்பதுக்குள் கருகிச்சாம்பலாயிட்ட
எம் வளரும் பயிர்கள்
இனியென்ன செய்ய வழமைபோல்
கண்ணீர் விட்டு கதறியழுது மீண்டுமொரு தடவை
நெஞ்சைக் கல்லாக்கிட வேண்டியதுதான்
உலகே உற்றுப்பார் கரியாகி கல்லாகிப்போன
எம் உறவுகளையும் உணர்வுகளையும்