Monday, June 26, 2006

கவிஞன் வீட்டுக்கூரைகூட கவிபாடும்..

அந்த மழை தந்த குளிரில் மனையாளை
கட்டியணத்து கற்பனை கடலில் மூழ்கி
"அந்த நிலவில் போய் மாடமாளிகை கட்டி
என் தங்கத்தை பஞ்ஞணையில் சாய்த்து"
முடிப்பதற்குள் என்வாய் மூடி தன்வாய் மலர்ந்தாள்
"அந்த மாடமாளிகையில் கூரைகள் ஏதுமில்லாது
வானத்தையே கூரயாக்கிடுவார் என் அத்தான்"
அருமை,அருமை நாம் கொண்ட காதல் மழையில்
என் மனையாள் கூட கவிஞையாகிவிட்டாள்
என்றெண்ணி முகம் நிமிர்ந்து பார்க்கயில்
பெரியதொரு மழைத்துளி தங்குதடையேதுமின்றி
கூரை வழியே என்நெத்திப்பொட்டில் பட்டுத்தெறித்தது

No comments: