Tuesday, January 10, 2006

இலங்கை தனில் இருபதைக்கடந்தால்

நாலாம்பிறை கண்டால் நாயலைச்சல் என்றது ஐதீகம்
இருபதைக் கடந்தால் அவமானம் என்றது அனுபவம்
கறுப்புத் தடித்த அட்டையிலே காகிதப்பொட்டலம்
பேருக்குத்தான் அது சான்றிதழ்
"அனுபவம் உண்டா" என்ற் குரலுக்கு முன்னே குப்பைகளாய்
"எவ்வளவு வைப்பாய்" என்ற இலஞ்சத்துக்கு முன்னே கசக்கி போட்ட காகிதங்களாய்
ஆணவம் கொண்ட முதலாளி ஒருவன்!

"பணமிருந்தால் உள்ளேயெடு இல்லையேல் காய்வெட்டிவிடு என்றான்"
கலைமகளையே அறிந்திராத என்னோருவன்!
"அனுபவமே இல்லாத உன்னைவைத்து அழிந்து போவதா என்றான்"
தலைப்பிரசவத்திற்கே அனுபவம் கேட்டால்

அனுபவம் கிடைப்பது எப்போது?
பிள்ளை பெறுவதுதான் எப்போது?
அனுபவம்தான் முதன்மையென்றால்

படிப்பு எதற்கு பட்டம்தான் எதற்கு
பணம்தான் முதன்மையென்றால்
பாடசாலை எதற்கு பல்கலைக்கழகம்தான் எதற்கு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கிறது எம்வீடு

வெட்டிப்பசங்கள் என தூற்றுகிறது எம்ஊரு
அழுத்திய உடைகளுடன் ஏறுகிறோம் அலுவலகப்படிகளில்
அலுத்துப்போன உணர்வுகளுடன் இறங்குகிறோம் அதேபடிகளில்..

No comments: