Monday, January 23, 2006

தாயின் நிலை

உயிரில் பாதி தந்து என்னை உருவாக்கியவள்
உலகில் பாதியை எனக்கு உணர்த்தியவள்
அன்பிற்கோர் எல்லையில்லை என்று புகட்டியவள்
பாசத்திற்கார் வேசமில்லை என்றுசொல்லியவள்
பாலர் பருவத்தில் அம்மாவாக இருந்தவள்
இருபதாவது வயதினில் சகோதரியாக இருந்தாள்
என் முப்பது தனில் என்சொல் கேட்கும் மகளாகிவிட்டாள்
நான் நாற்பதைக் கடந்தபோது "அந்தோ பரிதாபம்"
என் குடும்பத்திற்கு வேண்டப்படாத ஒருத்தியாகிவிட்டாள்..

3 comments:

U.P.Tharsan said...

அருமையான கவிதைகள். இதை பலபேர் பார்காமல் இருப்பது பாவம். நான் உங்களின் ஆக்கங்களை உள்வாங்குகிறேன். அப்போதாவது மறுமொழிகளும் பாராட்டுக்களும் வந்து குவியட்டும்.

tholaiththavan said...

அருமை!!! அருமை!!! அருமை!!!

ஒரு தாயின் நிலையை இவ்வளவு அழகாக, அற்புதமாக படைத்த உமக்கு என் நன்றிகள்.

நான் மிகவும் ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

சுதேசன் said...

நன்றி தர்சன் ,தொலைத்தவன் தொடர்ந்தும் உங்கள் கருத்துகளைத் தாருங்கள்.