Tuesday, January 10, 2006
பூட்டு
கடினப்பட்டு கண்விழித்தது
உன்னை நம்பியே
எனது அன்பிற்கும்,திறமைக்கும்கிடைத்தவை
உன்னை நம்பியே
நாளை என்னை சொந்தம் கொண்டாட வருவதும்
உன்னை நம்பியே
நடுத்தெருவில் நாதியற்றவனாய் விடமாட்டாய் என்பதும்
உன்னை நம்பியே
போய்வருகிறேன் போய்வருகிறேன்
என்னை காப்பாற்றுவாயோ?, களுத்தறுப்பாயோ?
உன்னை நம்பியே போய்வருகிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment