நீ கொண்ட வெட்கச்சிவப்பு
என் தோலின் நிறமாக வேண்டும்
நீ கொண்ட வெண்சிருப்பு
என் மனதின் தூய்மையாக வேண்டும்
நீ கொண்ட கருங்கூந்தல்
என் கனவின் இருளாக வேண்டும்
நீ கொண்ட கண்ணின்கருமணி
என் முகம் காட்டும் தளவாடியாக் வேண்டும்
நீ கொண்ட நாற்குணங்களும்
என் தங்கைக்கும் கிடைத்தருள வேண்டும்
நீ கொண்ட அன்பு மழையில்
என் தந்தையும்தாயும் மணற்சிற்பமாக வேண்டும்
நீ கொண்ட காதல்
என் உடலின் உயிராக வேண்டும்
நீ கொண்ட உறவு
என் பிரமச்சரியத்தின் முடிவாக வேண்டும்
நீ கொண்ட பிரிவு
என் வாழ்வின் முடிவாக வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
very nice... Good Poem
நன்றி வைதேகி
Post a Comment