Tuesday, January 10, 2006

கனவு மெய்பட வேண்டும்

நீ கொண்ட வெட்கச்சிவப்பு
என் தோலின் நிறமாக வேண்டும்

நீ கொண்ட வெண்சிருப்பு
என் மனதின் தூய்மையாக வேண்டும்

நீ கொண்ட கருங்கூந்தல்
என் கனவின் இருளாக வேண்டும்

நீ கொண்ட கண்ணின்கருமணி
என் முகம் காட்டும் தளவாடியாக் வேண்டும்

நீ கொண்ட நாற்குணங்களும்
என் தங்கைக்கும் கிடைத்தருள வேண்டும்

நீ கொண்ட அன்பு மழையில்
என் தந்தையும்தாயும் மணற்சிற்பமாக வேண்டும்

நீ கொண்ட காதல்
என் உடலின் உயிராக வேண்டும்

நீ கொண்ட உறவு
என் பிரமச்சரியத்தின் முடிவாக வேண்டும்

நீ கொண்ட பிரிவு
என் வாழ்வின் முடிவாக வேண்டும்

2 comments:

Anonymous said...

very nice... Good Poem

சுதேசன் said...

நன்றி வைதேகி